கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!
"கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!
"இந்தியாவுக்கு என்றால் ஒரு நீதி, மற்றவர்களுக்கு என்றால் ஒரு நீதியா?" – சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) இரட்டை நிலைப்பாட்டைப் பார்த்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷஹித் அஃப்ரிடி கடும் ஆவேசமடைந்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் வர மறுத்தபோது, அவர்களின் பாதுகாப்பு கவலையை உடனே ஏற்றுக் கொண்ட ICC, பங்களாதேஷ் விவகாரத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்? என அவர் கேள்வி0 எழுப்பியுள்ளார்.
"ICC பாலங்களை அமைக்கவில்லை, மாறாக எரித்துக் கொண்டிருக்கிறது. BCCI-க்கு ஒருவிதமாகவும், பிற நாடுகளுக்கு ஒருவிதமாகவும் செயல்படுவது கிரிக்கெட்டிற்குச் செய்யும் துரோகம்!" என அஃப்ரிடி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்கும் பணத்திற்கும் பணிந்து, கிரிக்கெட்டின் சமத்துவத்தை ICC காவு கொடுப்பதாக அஃப்ரிடி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Comments
Post a Comment