Posts

Showing posts from December, 2025

John Cena ஓய்வு பெற்றார்: ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை; கடைசி போட்டியில் என்ன நடந்தது?

Image
 John Cena ஓய்வு பெற்றார்: ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை; கடைசி போட்டியில் என்ன நடந்தது? Picture of Editor By Editor Published On: December 14, 2025 Follow Us Google WhatsApp Telegram Join Our WhatsApp Channel பிரபல மல்யுத்த வீரர் John Cena தனது கடைசி போட்டியில் விளையாடி WWE வளையத்திலிருந்து ஓய்வு பெற்றார். WWE தொடரில் “முடிசூடா மன்னன்” என ரசிகர்களால் போற்றப்பட்ட ஜான் சீனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இதுவரை WWE வரலாற்றில் 17 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளதுடன், யு.எஸ். சாம்பியன் பட்டத்தை ஐந்து முறையும், இன்டர் கான்டினென்டல் பட்டத்தை ஒருமுறையும், டாக் டீம் பட்டத்தை நான்கு முறையும், ராயல் ரம்பிள் தொடரை இருமுறையும் வென்றுள்ளார். தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட 726 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜான் சீனா, WWE-யின் மாதாந்திர PLE நிகழ்வுகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் The Undertakerக்கு அடுத்ததாக அதிக PLE வெற்றிகள் பெற்ற வீரராகவும் விளங்குகிறார். 2002 ஜூன் 27-ஆம் தேதி WWE வளையத்தில் முதன்முறையாக அறிமுகமான அவர், தனது இறுதி...

16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் – கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ

Image
 16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் – கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ December 2, 20252 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளையாவது ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை

 ரம்புகே எல கிராமம். - டிசம்பர் 01, 2025  ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொள்கிறது. உள்ளே மனிதர்கள் குழந்தைகள் முதியோர்கள் நோயாளர்கள் எல்லோரும்தான். நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன. மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம் இது.யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாத...