Posts

Showing posts from August, 2026

அனைவரும் தனிச் சிங்கள கிராமத்துக்கு இடமாற்றம் பெறப் போகிறார்கள்..

Image
 அனைவரும் தனிச் சிங்கள கிராமத்துக்கு இடமாற்றம் பெறப் போகிறார்கள்.. கெபெல்லவிட்ட மீரிகம அலவ்வ குளியாப்பிட்டிய வாரியபொல நிக்கவரெட்டிய மாவத்தகம கம்பஹா மினுவாங்கொட ஹம்பாந்தோட்டை  இந்த ஊரில் வேலை செய்தால் தெரியும். அக்காமாரையும் தங்கச்சி மாரையும் மாட்டிவிட்டு வைத்தியர் அண்ணா எங்கயோ.. சட்டம் தெரியாமல் மைக் முன்னால் பேட்டி கொடுத்த விடயமாக .. இனி எடுக்கும் சம்பளத்த பஸ்ஸுக்கு கொடுத்தா சரி.. சீருடையுடன் பணி நேரத்தில் ஊடக சந்திப்பு நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது! இலங்கை அரச மருத்துவமனை ஒன்றின் சிற்றூழியர் (Minor Staff) என்று அழைக்கப்பட்ட health work Assistant and care giver ஒருவர் சீருடையுடன், பணி நேரத்தில், ஊடகவியலாளர் சந்திப்பு (Media Conference) நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரச சேவை விதிகளுக்குப் புறம்பானதாகும். இது தொடர்பான சட்ட விதிமுறைகள் மற்றும் ஸ்தாபனக் கோவையின் (Establishments Code) மீறல்கள் பற்றிய விவரங்கள். 1. ஸ்தாபனக் கோவை மீறல்கள் (Establishments Code Violations) அத்தியாயம் XXXI, பிரிவு 3:2 (ஊடக அறிக்கை மற்றும் கருத்துத் தெரிவித்தல்) அரசு அலுவலர்கள் அரசி...

இனி பேருந்து நிறுத்தங்களில் மறித்து வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை🚨

Image
 இனி பேருந்து நிறுத்தங்களில் மறித்து வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை🚨 பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் தங்களுக்குரிய நிறுத்தங்களில் முறையாக நின்று செல்வதற்கும், பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்குவதற்கும் இடையூறாக இருக்கும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் இலங்கை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களில் மற்ற வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவதால், பொதுப் பேருந்துகளை சாலையின் நடுவிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது கடுமையான போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதுடன், பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அமைகிறது என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி (Wheelchair) வசதியுடன் கூடிய புதிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்குவதைத் தவிர்க்க பேருந்து நிறுத்தங்களை எவ்வித தடைகளும் இன்றி எப்போதும் தெளிவ...

சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image
 சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.   உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர். இலங்கையின் சாதகமான பதில்ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.  மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.  2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட...

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Image
 NEWS WORLD🌍 11 August 2026 கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காளி (Cali) நகரமும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காக போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து பேரழிவு நிவாரணக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் உள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குக் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பெரெய்ரா , மனிசாலேஸ் , கிப்தோ , ஆர்மீனியா , கார்தாகோ மற்றும்...

ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்

Image
 NEWS WORLD  02 August 2026 🛑ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம் ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வல​ைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெட...

மஹர சிறைச்சாலை பதற்றநிலை: தற்போதைய நிலவரம் என்ன?*

Image
  02 August 2026 பிரதான செய்தி *🛑மஹர சிறைச்சாலை பதற்றநிலை: தற்போதைய நிலவரம் என்ன?* மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.  இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.  நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.  அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.  கைதிகளால் சிறைச்சாலையின் தலைமை சிறை கட்டுப்பாட்டாளரின் அலுவலகத்திற்கும் ஒழுக்கவியல் பிரிவிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  மேலும், நேற்று பிற்பகல் சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு சென்ற போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலையினுள்...