சாரதியின் கவனயீனத்தால் பறிபோன 6 வயது மாணவியின் உயிர்.. RIP😥😥
சாரதியின் கவனயீனத்தால் பறிபோன 6 வயது மாணவியின் உயிர்.. RIP😥😥 மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது மாணவி ஒருவர் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்து பின், அதே சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக #உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இன்று (21) தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உ*யி*ரிழந்துள்ளார். இவ்வாறு உ*யி*ரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை சேர்ந்த சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமி ஆவார். திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் #பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக #சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இதன் போது அந்த சிறுமி...